போதனா மருத்துவமனையாக தரம் உயர்த்துவதற்கு அனுமதி!

hospital building icons vector
hospital building icons vector

களுத்துறை பொது மருத்துவமனை மற்றும் ஹோமாகம ஆரம்ப மருத்துவமனை ஆகியன போதனா மருத்துவமனையாக தரம் உயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

மொரட்டுவ பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் பயிற்சி நடவடிக்கை காரணமாக இவ்வாறு மாற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கான ஆய்வறிக்கை சுகாதாரத்துறை அமைச்சரினால் அமைச்சரவைக்கு நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.