மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற வேண்டும்!

17 rajapakse300 2 1
17 rajapakse300 2 1

ஒன்றிணைந்து தேர்தல் ஒன்றில் வெற்றி பெற முடியாத ஐக்கிய தேசியக் கட்சிக்கு பிரிந்து எவ்வித வெற்றியையும் பெற முடியாது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் உதய கம்மன்பிலவிற்கு ஆதரவாக கொலன்னாவையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேரதலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றி தொடர்பாக எந்த பிரச்சினையும் இல்லை.

எனினும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற வேண்டும்.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெறுவதன் மூலம் ஜனாதிபதியுடன் இணைந்து நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியும் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்