கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் அனைத்து செயற்பாடுகளிலும் இருந்து விலகியுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க பிரதிநிதிகள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் இன்றும் (வெள்ளிக்கிழமை) ஈடுபடவுள்ளனர்.
அரசாங்கம் தங்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை முன்வைக்காததன் காரணமாக குறித்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக அச்சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.
குறித்த போராட்டம் ஒன்பதாவது நாளாக இன்று முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 2 ஆயிரத்து 753 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.