மழையுடனான காலநிலை நிலவ கூடும்

RAIN 2
RAIN 2

இன்றைய தினம் நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடனான காலநிலை நிலவ கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்கள் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே வடமத்திய வடமேல் மற்றும் வட மாகாணங்களில் ஹம்பாந்தொட்டை மாவட்டம் மற்றும் மத்திய மலைநாட்டு பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோ மீட்டர் வேகத்தில் கடும் காற்று வீச கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.