சடலமாக மீட்கப்பட்ட முதியவர்!

unnamed 41 1
unnamed 41 1

மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதியவரின் சடலம் காங்கேசன்துறை கடற்கரையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

யாழ்.தீவகம் ஊர் காவல்துறை பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய முதியவர் நேற்று முன்தினம் மீன்பிடிப்பதற்காக சென்ற போது கடலில் தவறி விழுந்துள்ளார்.

இந்நிலையில் சக மீனவர்கள், கடற்படையினர் இரண்டு நாட்களாக கடலில் தொடர்ந்து தேடிய போதிலும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், முதியவரின் சடலம் இன்று காலை காங்கேசன்துறை கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.