தெற்கு கடல் பிராந்தியத்தில் செயலிழந்த நிலையில் இருந்து கென்ய நாட்டு படகு ஒன்றை கரைக்கு கொண்டுவருவதற்கு கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கைக்கு தென் பகுதியில் சுமார் 170 கடல் மைல் தொலைவில் வைத்து பல நாட்களாக செயலிழந்த நிலையில் இருந்த படகையே கரைக்கு கொண்டுவந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த படகு கடந்த ஜுன் மாதம் 22 ஆம் திகதி தென்கொரியாவின் புசான் துறைமுகத்தில் இருந்து 13 பணிக்குழாமினருடன் கென்யாவின் மொம்பாசா துறைமுகத்தை நோக்கி பயணத்தை மேற்கொண்ட நிலையில், செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.