பிரித்தானிய குடிவரவு மற்றும் குடியகல்வு தரப்பினர் தெரிவித்துள்ள விடயம்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 27 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 27 1

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்ட கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் தேங்கியுள்ளதாக பிரித்தானிய குடிவரவு மற்றும் குடியகல்வு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

எப்படியிருப்பினும், இந்த நிலமையை வழமைக்கு கொண்டுவரும் நோக்கில் துரித நடவடிக்கைகள் எடுக்க தீர்மானித்துள்ளதாக உள்துறை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் விடுமுறையில் செல்லவுள்ளவர்களுக்கான கடவுச்சீட்டுக்களை துரிதப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோல் 5 நாள் காலப்பகுதியினுள் கடவுச்சீட்டுக்களை புதுப்பிக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறையில் செல்வதற்கான ஆதாரங்களை சமர்ப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் பரீசீலிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.