சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி காணொளி எடுத்து வந்த ஆசிரியர் கைது

child 1
child 1

சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அதனை காணொளி எடுத்துவந்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் தனியார் வகுப்புக்களை நடத்தும் ஆசிரியர் எனவும் சுமார் 10 வருடங்களாக அவர் இவ்வாறான துஷ்பிரயோக செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சந்தேகநபரிடமிருந்து சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, அவர் எடுத்த காணொளிகள் சிலவற்றையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபரினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 3 சிறுவர்கள் நேற்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.