சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைது!

FB IMG 1545787156749
FB IMG 1545787156749

நாட்டில் தனியார் வகுப்புக்களை நடாத்தும் போது நீண்ட நாட்களாக சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தனியார் வகுப்புக்களை நடாத்தும் ஆசிரியர் ஒருவரினால் நீண்ட நாட்களாக சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 2 மாணவர்கள் மருத்துவ பரிசோதனைகளுக்காக களுபோவில போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்நிலையைில் மற்றுமொரு மாணவரையும் இன்றைய தினம் பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களாக சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அதனை காணொளி எடுத்து வந்த தனியார் வகுப்புக்களை நடாத்தும் ஆசிரியர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளுபிட்டி காவல்துறையினர் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு மையத்தின் அதிகாரிகள் ஊடாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 10 வருடங்களாக அவர் இவ்வாறான துஷ்பிரயோக செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.