3 ஆயிரத்து 556 நபர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் நிலையங்களில்..

NAVY Camp

நாடளாவிய ரீதியில் உள்ள 44 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 3 ஆயிரத்து 556 நபர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து மேலும் 29 நபர்கள் இன்று (திங்கட்கிழமை) வெளியேற்றப்படவுள்ளனர்.

அதற்கமைய, 26 ஆயிரத்து 942 பேர் முத்தரப்பு படையினரால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து தனிமைப்படுத்தல் நடைமுறையை நிறைவுசெய்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டில் நேற்றைய தினம் 1,851 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அதன்படி இதுவரை மொத்தமாக 153,065 பி.சி.ஆர். சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.