வடக்கு – கிழக்கு சமூக நல்லிணக்க அமைப்பு தமது ஆதரவை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.
அந்த அமைப்பின் பிரதிநிதிகள் இன்று (ஜூலை 27) திங்கட்கிழமை காலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பருத்தித்துறை அலுவலகத்தில் கட்சியின் பேச்சாளரும் வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரனை சந்தித்து தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
தமிழர்களே ஓரணி சேருங்கள், தமிழ் தேசியமே எங்கள் மூச்சு என்று கூறுங்கள் என்ற தலைப்பில் வடக்கு – கிழக்கு சமூக நல்லிணக்க அமைப்பு துண்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.