உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2015 ல் வெளியான படம் பாபநாசம்.
இந்த படத்தின் அனைத்து மொழிகளுக்கான உரிமையையும் நடிகர் ஸ்ரீபிரியாவின் கணவர் ராஜ்குமார் படத்தை பார்க்காமலேயே வாங்கியிருந்தாராம். மேலும் இப்படத்தை ஸ்ரீபிரியா தான் இயக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தாராம்.
ஆனால் இயக்குனர் ஜீத்து முன்பே கோரிக்கை வைத்துவிட்டதால் அவருக்கே கொடுத்துவிட்டார்களாம். மேலும் இப்படத்தில் முதலில் ரஜினியை நடிக்க வைக்கலாம் என பேச்சுவார்த்தை நடத்தினார்களாம்.
ஆனால் படக்குழுவினர்கள் கமல்ஹாசன் அந்த கதாபாத்திரத்திற்கு பொறுத்தமாக இருப்பார் என கூற உடனே ராஜ்குமாரும் ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.