முழங்காவிலில் சந்திரகுமாருக்கு பிரமாண்ட வரவேற்பு!

IMG 3810 696x464 1

பூநகரி முழங்காவில் பிரதேசத்தில் நேற்று (26) கேடயச் சின்னத்தில் சுயேச்சைக் குழு 5 இல் போட்டியிடுகின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமாரின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது.

முழங்காவில் நாச்சிக்குடா சந்தியில் பெருமளவு மக்களுடன் குறிப்பாக அதிகளவு இளைஞர்கள் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டமாக நடைப்பெற்றது.

இதன் போது கருத்துரைத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார், கிளிநொச்சியில் இந்த தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் அணிதிரண்டுள்ளமை எமது வெற்றியை உறுதி செய்துள்ளது. இதன் மூலம் இந்த தேர்தலில் மக்கள் வெற்றி பெறவுள்ளனர். குறிப்பாக இளைஞர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அந்த மாற்றத்திற்காக அவர்களின் தெரிவு எமது கேடயச் சின்னமாகவே இருக்கிறது எனத் தெரிவித்தார்.