தலைமன்னார் கடற்கரையில் ஆணின் சடலம் கண்டெடுப்பு

dead 2 1
dead 2 1

தலைமன்னார் பழைய பாலம் தென் கடற்கரையில் உருக்குழைந்த நிலையில் கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) காலை றோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலத்தை அவதானித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள், தலைமன்னார் பொலிஸாருக்கு உடனடியாக  தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த தகவலுக்கமைய  அவ்விடத்திற்கு விரைந்த தலைமன்னார் பொலிஸார், சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்ததோடு, மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர்.