சேவை செய்யக் கூடிய சரியானவர்களை பாராளுமன்றம் அனுப்ப வாக்களியுங்கள்

jaffna bishop 720x450 1
jaffna bishop 720x450 1

கொரோனா என்ற அச்சமில்லாது அனைத்து மக்களும் வாக்களிக்குமாறு யாழ்.மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் கோரிக்கை விடுத்துள்ளார் .

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள் என ஊடகவியலாளர்களின்  கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..
எதிர்வரும் 5 ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் நாம் அனைவரும் எமது  வாக்குரிமையை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் நீங்கள் உங்களுக்கு சேவை செய்யக் கூடிய  சரியானவர்களை பாராளுமன்றம் அனுப்ப நீங்கள் கட்டாயம்  தேர்தலில் பங்குபற்றவேண்டும்.

கொரோனா  என்று பயப்படாமல் தங்களுக்குரிய  இந்த வாக்களிக்கும் வாய்ப்பினை  பாவித்து எங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டுமெனவும் ஆயர் தெரிவித்தார்