மேலும் 175 பேர் பூரண குணமடைவு!

@ 4
@ 4

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 175 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் பூரண குணமடைந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,296ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, ஒரே நாளில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் பூரண குணமடைந்துள்ளமை இன்றைய தினத்தில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.