சுமந்திரன் சிறிதரனுக்கு எதிராக யாழில் துண்டுப்பிரசுரம்- தமிழ் புத்திஜீவிகள் அமைப்பு விநியோகம்!!

sri sumo 1
sri sumo 1

‘தமிழ் மக்களே சிந்தித்து செயற்படுவோம்’ என்ற தலைப்பில், ‘சுமந்திரன், சிறிதரனை தமிழ் அரசியலில் இருந்து அகற்றுவோம்..’ என்ற துண்டுப்பிரசுரங்கள் யாழ் குடாவில் விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் புத்திஜீவிகள் என்ற பெயரில் வினியோகிக்கப்பட்டுவரும் அந்தத் துண்டுப் பிரசுரங்களில்,

  • தமிழரின் தேசிய போராட்டத்தை ஏற்றுக்கொள்ளாத சுமந்திரன் தமிழருக்குத் தலைமை தாங்கலாமா?
  • இனப்படுகொலை விசாரணையை நீர்த்துப்போக சிங்கள அரசுடன் சேர்ந்து சதிசெய்த சுமந்திரனையா மீண்டும் நாடாளுமன்றம் அனுப்பப்போகின்றீர்கள்?
  • அடுத்த தீபாவளிக்குள் அரசியல் தீர்வு என்று ஏமாற்றிய சம்பந்தனும், 2018 ஆண்டுக்குள் அரசியல் தீர்வு இல்லையேல் பதவி விலகுவேன் என்று கூறிய சுமந்திரனும் ஏன் நாடாளுமன்றப் பதவிகளைத் துறக்கவில்லை?
  • கொழும்பில் சிங்களவர்களுடன் கூடிவாழ்வதை பாக்கியமாகக் கருதும் சுமந்தினுக்கு எமது நிலங்கள் பறிபோவது பற்றி எவ்வாறு கவலை இருக்கும்?
  • தமிழ் தேசியத்தின் காவலன் என்று தன்னை பறைசாற்றிவிட்டு இன்று பணத்திற்காக பச்சோந்தியாக மாறிய சிறிதரன் மீண்டும் எமக்குத் தேவையா?

போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

யாழ்குடாவின் பேரூந்துகள், வைத்தியசாலை, பொது இடங்களில் இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.