கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ராஜங்கனை மருத்துவ அலுவலகர் பிரிவுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு சில நடவடிக்கை எடுக்கப்படும்.
நேற்றைய தினம் குளுந்தேகம, சிறிமாபுர பிரிவு 01 (சந்தை பின் பகுதி தவிர்ந்த), பிரிவு 02 என்பன கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிரதேசங்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை எதிர்வரும் 31 ஆம் திகதி 01,03, 05, 06 ஆகிய சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு கட்டுபாடுகள் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.