நாட்டில் நேற்று புதிய கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை

02 12

நாட்டில் நேற்றைய தினம் புதிய கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படாத நிலையில் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 2,810 ஆகவே உள்ளது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்குள்ளான 482 பேர் வைத்திய மற்றும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 599 பேரும், வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 917 பேரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் தரவுகள் படி, கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் 80 பேர் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர். 

அதேநேரத்தில் கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 21 பேர் வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,317 ஆக அதிகரித்தது.