தலைக்கவசமில்லாததால் பொலிசாரை கண்டதும் தப்பியோடிய யாழ் இளைஞன் விபத்தில் பலி!

1542890614 dead body 2

வரணியில் நேற்று (29) விபத்தில் சிக்கிய இளைஞர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வரணியில் நேற்று பகல், தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளில் இரண்டு இளைஞர்கள் பயணித்தனர். இதன்போது வீதியில் பொலிசாரின் வாகனம் வருவதை கண்டு, அதிவேகமாக பயணித்துள்ளனர்.

கொடிகாமம்- பருத்தித்துறை வீதி திருத்தும் பணிகள் நடந்து வருகிறது. வீதி அபிவிருத்தியில் ஈடுபடும் நிறுவனத்தின் கனராக வாகனத்துடன்- வரணி வைத்தியசாலையின் முன்பாக மோதி விபத்திற்குள்ளாகினர்.

இடைக்குறிச்சி வரணியை சேர்ந்த பிரான்சிஸ் சைனிஸ் , யோகேந்திரன் கோகுலன் இருவரும் படுகாயமடைந்து, வரணி வைத்தியசாலையிலிருந்த மேலதிக சிகிச்சைகளிற்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில், படுகாயமடைந்த இளைஞர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.