ETI பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு

CID 1
CID 1

ETI நிறுவனத்தின் பணிப்பாளர் குழு உறுப்பினர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ETI கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறித்து வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

ETI நிறுவனத்தின் பணிப்பாளர்கள் நால்வரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த 16 ஆம் திகதி பிடியாணை பிறப்பித்திருந்தது.

ETI நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிட்ட மூவர் தாக்கல் செய்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே, கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்தார்