கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்

IMG 20200731 WA0004
IMG 20200731 WA0004

கிளிநொச்சி 155ம் கட்டை சந்தியில் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) பிற்பகல் வேளையில் இரு கனரக வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து தொடர்பாக தெரிய வருகையில்

A9 வீதி கிளிநொச்சி பகுதியில் முச்சக்கரவண்டி மற்றும் இரண்டு கனரக வாகனங்களும் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் முச்சக்கரவண்டி வீதியை கடக்க முற்பட்ட வேளை பின் தொடர்ந்து வந்த வாகனம் வேகத்தை குறைத்த போது அதன் பின்னால் வந்த டிப்பர் வாகனம் முன்னால் சென்ற வாகனத்துடன் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது டிப்பர் வாகன சாரதி காயமடைந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.