இந்தியாவில் மதுபானத்துடன் தொற்றுநீக்கி கலந்து குடித்த 9 பேர் பலி!

hs
hs

இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் மதுபானத்துடன் தொற்றுநீக்கியை கலந்து குடித்த 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் சிலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் காரணமாக மதுபானசாலைகள் மூடப்பட்டதால், சிலர் போதைக்காக மாற்றுவழிகளை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவின் ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம் குரிசெடு கிராமத்தில், போதைக்காக, மதுபானத்துடன் சிலர் தொற்றுநீக்கியை கலந்து குடித்துள்ளனர்.

இதில், 9 பேர் உயிரிழந்ததுள்ளனர். அதில் 3 பேர் யாசகர்கள் எனவும், ஏனையவர்கள் குரிமேடு கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் 20 பேர் தொற்றுநீக்கியை குடித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் சிலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.