உரிமைகளை நிலைநாட்ட அனைவரும் வாக்களிக்க வேண்டும்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 2 11
625.500.560.350.160.300.053.800.900.160.90 2 11

உங்களது உரிமைகளை நிலைநாட்ட அனைவரும் வாக்களிக்க வேண்டுமென தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ண ஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

ஆகஸ்ட் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக மக்கள் வாக்களிப்பதற்கு தயங்குகிறார்கள். உண்மையில் மக்கள் இதுதொடர்பில் அச்சப்பட தேவையில்லை.

நாங்கள் வாக்களிப்பின் போது கொரோனா தொற்று தடுப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.

ஏற்கனவே சுகாதார நடைமுறைகளை பின்பற்றி எவ்வாறு வாக்களிப்பினை மேற்கொள்வது தொடர்பாக மாதிரி வாக்களிப்பினை பரீட்சித்துப் பார்த்திருக்கிறோம்.

தேர்தல் தினத்தன்று வாக்குச் சாவடியில் கொரோனா தொற்று ஏற்படகூடிய சாத்தியக்கூறு குறைவானதாகவே இருக்கும்.

நீங்கள் வாக்களிப்பு நிலையத்துக்குள் செல்லும் போது முகக்கவசம் அணிந்து, கைகளை கழுவி ஏனையோர் பாவித்த பேனைகளை பாவிக்காத வகையில் பல சுகாதார நடைமுறைகளை வாக்களிப்பு நிலையங்களில் மேற்கொண்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.