விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன் பில ஆகியோருக்கு கடுமையான எதிர்ப்பு!

download
download

கொழும்பு துறைமுகத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன் பில ஆகியோருக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய செயற்பாடுகளை துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டு வருமாறு வலியுறுத்தி 23 துறைமுக தொழிற்சங்கள்கள் நேற்று 31 முதல் தொடர்ச்சியான பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையிலேயே மேற்படி இருவரும் ஊழியர்களுடன் பேச்சு நடத்தி தீர்வை காணும் நோக்கில்சென்றுள்ளனர். இதன்போது அவர்களுக்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தீர்வு வழங்காது அங்கிருந்து சென்றுள்ளனர்.

எனினும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் விமல்வீரன்ச, எதிர்வரும் 6 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்றுக்கு வருமாறு ஜனாதிபதி கூறியதாக அவர்களிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.