தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவித்தல்!

0 1
0 1

எதிர்வரும் பொதுத்தேர்தலில் வாக்களிக்க வருகைதரும் வாக்காளபெருமக்கள் வாக்குச்சீட்டில் புள்ளடியிட பேனாவை கொண்டுவருமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இவ்வாறு கொண்டுவரப்படும் பேனாக்கள் நீல அல்லது கறுப்பு நிறம் உள்ளவையாக இருக்கவேண்டுமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் இதேவேளை வாக்களிக்க வருபவர்கள் காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தையும் பயன்படுத்தமுடியுமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.