கொழும்பு, மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பூனை காணாமல் போயுள்ளதாக சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று முன்தினம் மெகசின் சிறைசாலைக்கு அருகில் சிறைச்சாலை புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் பொறுப்பில் எடுக்கப்பட்ட பூனையே இவ்வாறு காணாமல் போயுள்ளது.
இந்த பூனையின் கழுத்தில் இருந்து 1.1 கிராம் ஹெரோயினும், சிம் அட்டைகள் இரண்டு மெமரி அட்டை ஒன்றையும் சிறைச்சாலை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த பூனை மூலம் எந்த கைதிக்கு ஹெரோயின் அனுப்ப முயற்சிக்கப்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அறையொன்றில் பாதுகாப்பாக அடைக்கப்பட்ட பூனை காணாமல் போயுள்ளதாக சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.