மஹியங்கனை பகுதியில் மகாவலி கங்கைக்கு நீராடச் சென்ற யுவதியொருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம்(ஞாயிற்றுகிழமை) (02) இடம்பெற்றுள்ளது.
குருநாகலையில் இருந்து சுற்றுலாவுக்காக மஹியங்கனைக்கு சென்றுக்கொண்டிருந்த இளைஞன் மற்றும் யுவதியொருவரே இவ்வாறு மகாவலி கங்கைக்கு நீராடச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் 18 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி நீராடச் சென்ற இளைஞனும் குறித்த யுவதியும் குருநாகல்-கடுபொத மற்றும் திரகம பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நீராடுவதற்கு தடை செய்யப்பட்ட பகுதிகளில் நீராடியதன் காரணமாகவே குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.