காகித ஆலையின் முதலாவது தொகுதி உற்பத்திகள் விற்பனைக்கு

1 5
1 5

கடந்த ஆறு வருட காலத்தின் பின்னர் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ள வாழைச்சேனை காகித ஆலையின் முதலாவது தொகுதி உற்பத்திகள் விற்பனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

இதன்போது சுமார் நாற்பது தொன் எடையுள்ள கனமான கடதாசி லொறிகளில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக ஆலையின் உதவி முகாமையாளர் சபாபதிப்பிள்ளை அம்பிகாவதி தெரிவித்தார்.

1951ஆம் ஆண்டு நிர்மானிக்கப்பட்ட வாழைச்சேனை காகித ஆலையில் 1966ஆம் ஆண்டு தொடக்கம் வைக்கோலைக் கொண்டு கடதாசி உற்பத்தி செய்யும் நடவடிக்கை நடைபெற்றது. இங்கு சுமார் நான்காயிரம் பேர் வரை பணியாற்றினர்.

பின்னர் கடதாசிகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதையடுத்து உள்ளுர் உற்பத்திகளுக்கு போதியளவு சந்தை வாய்ப்பு கிடைக்கவில்லை இதனால் 2014ஆம் ஆண்டில் உற்பத்திகள் முழுமையாக இடைநிறுத்தப்பட்டன.

,2016ஆம் ஆண்டில் சுயவிருப்பின் பேரில் பலர் இழப்பீீீீீீீீட்டினைப் பெற்றுக் கொண்டு ஓய்வு பெற்றனர். தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்ததையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் விசேட திட்டத்திற்கமைவாக கடதாசி ஆலை புனர்நிருமானம் செய்யப்பட்டு உற்பத்திகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ளும் அரிய சந்தர்ப்பம் மீண்டும் உதயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.