வாக்குப் பெட்டிகளை விநியோகம் செய்யும் பணி இன்று

20200804134910 IMG 9648

நாடு முழுவதும் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகளை விநியோகம் செய்யும் நடவடிக்கை இன்று நடைபெறவுள்ளது.

71 விநியோக மையங்களில் இருந்து காலை 8 மணிக்கு வாக்குப் பெட்டிகளை அனுப்பும் பணி தொடங்கும் என்று தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசபிரியா தெரிவித்தார்.

அத்துடன் வாக்குப் பெட்டிகளின் விநியோகமானது உயர்ந்த பாதுகாப்பின் கீழ் நடைபெறும் என்னும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாளை நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் 16,263,885 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 11,102 இடங்களில் நிறுவப்பட்ட 12,985 வாக்குச் சாவடிகளில் வாக்களிப்பு நடைபெறும்.