குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

5 1

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 2,524 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 07 பேர் குணமடைந்த நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் இதுவரை அடையாளம் காணப்பட்ட 2828 பேரில் 293 பேர் தொடர்ந்தும் வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதேவேளை கொரோனா தொற்று சந்தேகத்தில் 69 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளதுடன் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.