எதிர்வரும் 7 ஆம் திகதி வரை வைக்கப்பட்டுள்ள காவல்துறை உப பரிசோதகர்!

85158
85158

முன்னாள் பிரதிக் காவல்துறைமா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு எதிரான வழக்கில், போலி சாட்சியம் வழங்கியமை தொடர்பாக
கைது செய்யப்பட்ட காவல்துறை உப பரிசோதகர் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதிக் காவல்துறைமா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு எதிரான வழக்கில், போலி சாட்சியம் வழங்கியமை தொடர்பாக காவல்துறை உப பரிசோதகர் ஒருவர் கொழும்பு குற்றவியல் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு 8.25 அளவில் அவர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எம்பிலிப்பிட்டி காவல்துறை நிலையத்தில் பணியாற்றிய, போத்தல பகுதியை சேர்ந்த குறித்த காவல்துறை பரிசோதகர், வாக்குமூலம் பதிவு செய்வதற்காக கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதற்கமைய, சாட்சியம் பதிவுசெய்யப்பட்டதன் பின்னர், நேற்றிரவு அவர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக கடந்த மாதம் 31 ஆம் திகதி கைதுசெய்யபட்ட குற்றப் புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷாணி அபேசேகர, எதிர்வரும் 7ஆம் திகதிவரை விளக்கமறியவலில் வைக்கப்பட்டுள்ளார்.