இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

9cdf6 5
9cdf6 5

நாட்டில் நாளையதினம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை மீண்டும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எனினும் எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் செயற்பாடு மீள ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் 08 ஆம் திகதி டுபாயிலுள்ள 660 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

மாலைதீவு, அவுஸ்திரேலியா, கட்டார், ஓமான், பஹ்ரைன், மலேசியா, சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் கடமைகளில் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஈடுபடவுள்ளமையினால் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.