நடைபெற்று கொண்டிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மஹியங்கனை- தம்பான பழங்குடியினரின் தலைவர் விஸ்வ கீர்த்தி வனஸ்பதி உருவரிகே வன்னிலா அத்தான் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்.
தம்பான கனிஷ்ட வித்தியாலயத்திலுள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு தனது மனைவி மற்றும் தனது இன மக்களுடன் இன்று (புதன்கிழமை) காலை சென்று வாக்களித்துள்ளார்.
அவருடன் சென்ற அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மிகவும் அமைதியான முறையில் வாக்களித்து, தங்களது ஜனநாயக கடமைகளை நிறைவேற்றியுள்ளனர்.
மஹியங்கனை தொகுதியில் 105,150 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.