பொதுத் தேர்தல் – வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பம்

Vote 1

பொதுத் தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

9ஆவது நாடாளுமன்றுக்கான பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் இடம்பெற்றிருந்தன.

5 மணியளவில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்ற பின்னர் சுமார் 8 மணியளவில் வாக்குப் பெட்டிகள் யாவும் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தன.

இம்முறை தேர்தலில் 71வீத வாக்குப்பதிவுகள் இடம்பெற்றதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.