முதல் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவது தொடர்பான அறிவிப்பு

ele
ele

நாடாளுமன்றத் தேர்தல் 2020க்கான வாக்குகளின் எண்ணிக்கை தற்போது நாடு முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2.30 மணியளவில் முதல் தேர்தல் முடிவு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதேநேரம், இன்று நள்ளிரவுக்குள் இறுதி தேர்தல் முடிவுகளை வெளியிட முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து முடிவுகளும் ஓகஸ்ட் 08ஆம் திகதி சனிக்கிழமையன்று வர்த்தமானி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.