மருத்துவமனை தீ பரவலில் பரிதாபமாக பலியாகிய கொரோனா நோயாளிகள்

625.500.560.350.160.300.053.800.748.160.70 2 5
625.500.560.350.160.300.053.800.748.160.70 2 5

குஜராத்தின் அகமதாபாத்தில் வியாழக்கிழமை அதிகாலை கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கான தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகாலை 3 மணியளவில் அகமதாபாத்தின் நவரங்க்புரா பகுதியில் உள்ள ஷ்ரே மருத்துவமனையிலே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மின்னழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

தகவலறிந்து எட்டு தீயணைப்பு இயந்திரங்கள் மற்றும் தீயணைப்பு துறையின் 10 அம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டன.

இந்த விபத்தில் அவசர சிகிச்சை பிரிவு அறையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐந்து ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் இறந்தனர்.

50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் விபத்து நடந்த நேரத்தில் சுமார் 45 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

உயிரிழந்த 8 கொரோனா நோயாளிகளை தவிர மீதமுள்ளவர்கள் மீட்கப்பட்டு நகரில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.