முல்லைத்தீவு – உடையார்கட்டுப் பகுதியில் வீட்டில் கற்பதற்காக தங்கியிருந்த சிறுமியை கற்பழித்த குற்றத்திற்காக மதகுரு ஒருவருக்கு 17 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
5 பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய மதகுரு தனது வீட்டில் தங்கியிருந்த சிறுமியை கற்பழித்த குற்த்திற்காக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பகிர்வு பத்திரம் 2019 ஆம் ஆண்டு இரண்டாம் மாதம் 20 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் விசாரணைகள் இடம்பெற்று கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் மதகுருவாக இருந்தும் தன்னைவிட வயது குறைந்த, பாதிக்கப்பட்ட பிள்ளையின் சம்மதத்தின் பெயரில் இக்கற்பழிப்பு சம்பவம் இடம்பெற்றதாக குற்றம் உறுதிப்படுத்தப்பட்டது.
குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட மதகுருவுக்கு 17 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 5000 ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டதுடன் தண்டப்பணத்தினை செலுத்த தவறின் 6 மாத சாதாரண சிறைத்தண்டணையும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 3 இலட்சம் ரூபா செலுத்த வேண்டும் எனவும், அதனை செலுத்த தவறின் 24 மாத சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.