வெலிகடை சிறைசாலையில் 15 அடி உயரத்தில் புதிய வேலி

welikada P 1000px

வெலிகடை சிறைசாலையில் 15 அடி உயரத்துடன் கூடிய புதிய பாதுகாப்பு வேலியொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை முகாமை மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைசாலையில் பெண்கள் பிரிவில் போதைப்பொருள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் வீசப்படுவதை தடுக்கும் விதமாக இப் புதிய பாதுகாப்பு வேலி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இச் சிறைச்சாலையில் பெண்கள் பிரிவில் தொடர்ச்சியாக போதைப்பொருள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் வீசப்படுவது கண்காணிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை முகாமை மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.