யாழ்ப்பாண தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாகவுள்ள அமர் நடராஜா ரவிராஜின் நினைவுத்தூபி அருகில் சசிகலா ரவிராஜுக்கு நீதிவேண்டி போராட்டம் ஒன்று இன்று(சனிக்கிழமை) இடம்பெற்றது.
இந்த போரரட்டம் சசிகலா ரவிராஜின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்டது.
இடம்பெற்று முடிந்த தேர்தலில் சசிகலா ரவிராஜுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்தே இந்தப் போராட்டம் இடம்பெற்றது.