புதிய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நாளை பதவியேற்கவுள்ளார்.
களனி ரஜமகாவிகாரையில் நாளை காலை 8.30க்கு அவர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மகிந்த ராஜபக்ஸ 4 தடவையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ 5 இலட்சத்து 27 ஆயிரத்து 364 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.
வரலாற்றில் நாடாளுமன்ற வேட்பாளர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய விருப்பு வாக்குகள் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.