காவல் துறை அதிகாரி மீது கைக்குண்டுகளை வீசி தப்பி செல்ல முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வெல்லவாய காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
காவல் துறை அதிகாரி மீது வீசப்பட்ட கைக்குண்டு செயலிலந்து காணப்பட்டதால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் 32 வயதான நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.