பிறந்த குழந்தையை கொலை செய்து காட்டில் வீசிய தாய் கைது!

1541152203 9941
1541152203 9941

பண்டாரவெலை,புனாகல,மஹாகந்த பகுதியில் பிறந்த குழந்தையை கொலை செய்து காட்டில் வீசிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கொஸ்லாந்தை காவல் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதணை நடவடிக்கைகளின் போதே இந்த குழந்தை மீட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 27 வயதான தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.