யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள அமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி அலங்கரிங்கப்பட்டிருந்த பூச்சாடிகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 5மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது அமரர் ரவிராஜின் உருவச்சிலையை மூடி சசிகலா ரவிராஜின் ஆதரவாளர்களால் நேற்றைய தினம் கட்டப்பட்டிருந்த கறுப்பு, சிவப்பு துணிகளும் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.