பர்மாவை போன்று இலங்கை மாறிவிடும்-ரிஷாத் தெரிவிப்பு

risath

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்தால் முஸ்லிம்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆவதுடன் பர்மாவைப் போன்று இலங்கையும் மாறிவிடும்

– ரிஷாத் பதியுதீன் –

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்த பிரச்சாரக் கூட்டம் சம்மாந்துறை விளினையடி சந்தி அருகாமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது.

இதன் போது கருத்து தெரிவித்த ரிஷாத் பதியுதீன்;

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்தால் முஸ்லிம்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆவதுடன் பர்மாவைப் போன்று இலங்கையும் மாறிவிடும் என அழுத்தமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இதில் இனவாதங்களை களையெடுக்கக்கூடிய குறிப்பாக முஸ்லிம் மக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய வேட்பாளரான சஜித் பிரேமதாசாவையே ஆதரிக்க வேண்டும் மேலும் ஜனாதிபதியை தெரிவுசெய்யுமாறு தன்னை கூறும் வேட்பாளர் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.எம். ஹிஸ்புல்லாஹ் முஸ்லிம் மக்களது வாக்குகளை வீணாக்கி பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை வெற்றி பெறச்செய்யும் நடவடிக்கைகளில் களம் இறங்கியுள்ளார்.

அவரது வார்த்தைகளை நம்பி நாம் ஒரு போதும் ஏமாந்து விடக்கூடாது. அத்துடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் எப்போதோ பேசிய காணொளியை இப்போது வெளியிட்டு இந்த அநாகரிகமான செயலை செய்தமையினை எங்களது கட்சி வன்மையாக கண்டிக்கின்றது.

நாட்டின் தலைமையை தீர்மானிக்கும் தேர்தலில் மக்களாகிய நீங்கள் தான் எமது சமூகத்தின் பாதுகாப்பிற்கு ஏற்ற நாட்டின் தலைமையான சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.