மேல் மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 331 பேர் கைது!

Thiththikfkum isaffgi copy 1 620x330 1

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 331 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஹெரோயின் வைத்திருந்த 122 பேரும் சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட 94 பேரும், அதேநேரம் ஐஸ் ரக போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.