மாத்தளை – கண்டி இடையிலான ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

bdaf569e matale

மாத்தளை – கண்டி நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கட்டுகஸ்தோட்ட மற்றும் வத்தேகம பகுதிகளுக்கிடையிலான ரயில் மார்க்கத்தில் சடலமொன்று காணப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இரண்டு ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.