மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

26f6def1 675d6c76 corona 850x460 acf cropped
26f6def1 675d6c76 corona 850x460 acf cropped

இலங்கையில் மேலும் 2 கொரோனா நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 2 பேருக்கு இன்றைய தினம் கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2869 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் 14 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ள நிலையில் இதுவரையில் 2593 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

தற்போதைய நிலையில் 265 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.