கஞ்சாவுடன் பொலிஸ் உட்பட இருவர் கைது

navy
navy

மன்னாரில் சொகுசு வாகனத்திலிருந்து கேரளா கஞ்சா 164.3 கிலோ கிராம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வாகனம் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்றமையினால் சொகுசு வாகனத்தின் டயர்களுகள் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு குறித்த வாகனத்தில் கேரள கஞ்சா கடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவரை கைது செய்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரி குறித்த சந்தர்ப்பத்தில் சீருடையில் இருந்ததாகவும், அவர் வாகனத்தின் முன் பகுதியில் இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.