நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,871 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் (10) 27 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பிய நால்வரும் சேனபுர புனர்வாழ்வு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 23 பேரும் நேற்று(திங்கட்கிழமை) COVID – 19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் 2,593 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.